தேவையானப் பொருட்கள்:
வேக வைத்த கோழிக்கறி – 1 கப் (எலும்பு இல்லாமல்), பட்டன் காளான் – 100 கிராம், பொடியாக்கிய வெங்காயம் – 1/2 கப், நறுக்கிய தக்காளி – 1/2 கப், மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி, கரம் மசாலாத் தூள் – 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி தழை – நறுக்கியது 2 மேசைக்கரண்டி, இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, புதினா – நறுக்கியது 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி.
செய்முறை:
காளானை பொடியாக நறுக்கவும். கோழிக்கறியை தூளாக உதிர்த்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு விழுது செர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின் மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின், தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு காளானையும் சேர்த்து வதக்கவும். அதன்பின் கோழிக்கறி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து ஒரு கை தண்ணீர் தெளித்து 2 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
Leave a Reply