தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள் – 1/2 கிலோ
வெங்காயம், தக்காளி – 200 கிராம்
வெண்ணை – 100 கிராம்
பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தயிர் – 1 கப்
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2
செய்முறை
அகலமான பாத்திரத்தில் தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். சிக்கன் துண்டுகளை மசாலா கலவையில் புரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அகலமான கடாயில் எண்ணை மற்றும் வெண்ணை சேர்த்து சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். தொடர்ந்து இஞ்சி, பூண்டு விழுது நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். மசாலாவில் ஊற வைத்த சிக்கனை, தந்தூரி அடுப்பிலோ அல்லது மைக்ரோவேவ் ஓவனிலோ வைத்து இருபுறமும் சிக்கனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தாளித்து வதக்கிய வெங்காயம், தக்காளியுடன் போதுமான அளவு உப்பு சேர்த்து அதனுடன் வேக வைத்த சிக்கனையும் சேர்த்து நன்கு கிளறவும். சிக்கனை இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
Leave a Reply